விருதுநகர் தொகுதியில் "கட்சியின் பெயர் நாம் தமிழர், ஆனால், வேட்பாளருக்கு தமிழ் படிக்கத்தெரியாது"

0 344

விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேட்டியிடும் கெளசிக் என்பவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கலை அடுத்து உறுதிமொழியின் முதல் வார்த்தையை விருதுநகர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் வாசித்த நிலையில், வேட்பாளருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை.

இதையடுத்து உறுதிமொழி முழுவதையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் படிக்க அதை அப்படியே வரிக்கு வரி வேட்பாளர் கெளசிக் திருப்பிக்கூறினார்.

ஓமன் நாட்டில் படித்ததால் கெளசிக்கிற்கு தமிழ் படிக்கத்தெரியாது என நாம் தமிழர் கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர். நாம் தமிழர் என்று கட்சி பெயரை வைத்துக் கொண்டு தமிழ் படிக்கத் தெரியாதவர் வேட்பாளராக உள்ளாரே என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments